search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக காங்கிரஸ்"

    • குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம்.

    சென்னை:

    சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது :-

    ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் ஏன் வாய் திறக்கவில்லை.

    குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


    இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பா.ஜ.க. இதுகுறித்தும் பேசவேண்டும்.

    காவிரி விவகாரத்தை அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, காமராஜர் அரங்கத்தின் முகப்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஷ்வரா அம்மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றதால் புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் என்பவரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
    புதுடெல்லி :

    சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தது.

    முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஷ்வராவும் பதவியேற்றனர்.

    இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஷ்வரா துணை முதல்வாரானதை தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். காங்கிரஸ் சட்டசபை உறுப்பினரான ஈஸ்வர் கந்த்ரே என்பவர் காங்கிரஸ் புதிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    48 வயதாகும் தினேஷ் குண்டுராவ் ஏற்கெனவே பரமேஷ்வராவிற்கு கீழ் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்த அனுபவமுடையவர். பெங்களூருவில் உள்ள காந்திநகர் சட்டசபை தொகுதியில் இருந்து தினேஷ் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் சித்தராமையா தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உணவுத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
    ×